Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவனுக எல்லார் மீதும் கேஸ் போட்டு உள்ளே தள்ளு: மிரட்டும் அதிமுக அமைச்சர்!

இவனுக எல்லார் மீதும் கேஸ் போட்டு உள்ளே தள்ளு: மிரட்டும் அதிமுக அமைச்சர்!

இவனுக எல்லார் மீதும் கேஸ் போட்டு உள்ளே தள்ளு: மிரட்டும் அதிமுக அமைச்சர்!
, புதன், 26 ஜூலை 2017 (09:34 IST)
அதிமுக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் செய்த சட்ட விரோத செயலை தடுத்து காவல்துறையில் புகார் அளித்த இந்து முன்னணியினர் மீது அமைச்சர் தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்தி அவர்கள் மீதே வழக்கு பதிவு செய்ய முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அதிமுக அமைச்சர் கே.சி கருப்பணனின் தனது ஆதரவாளர்களின் பொக்லைன் மூலன் சட்ட விரோதமாக திருடி எடுத்து செல்ல முயற்சித்தபோது இந்து முன்னனி நிர்வாகிகள் அதனை தடுத்துள்ளனர்.
 
இதனால் அமைச்சர் தனது அடியாட்கள் மூலம் இந்து முன்னணியினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி அவர்களை அந்த இடத்தை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்து முன்னணியினர் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர்.
 
இந்நிலையில் காவல்நிலையத்துக்கு நேராக வந்த அமைச்சர் இந்து முன்னணியினரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களை பார்த்து, என்னப்பா உங்களுக்கு பிரச்சனை என மிரட்டும் தொனியில் பேசிவிட்டு, இவனுக எல்லார் மீதும் கேஸ் போட்டு உள்ளே தள்ளு என போலீசாருக்கும் உத்தரவு போட்டுவிட்டு அவர் கிளம்பியதாக தகவல்கள் வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக இளம் விஞ்ஞானிகளின் பலூன் செயற்கைக்கொள்: ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.