Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரண்ட் பில் கட்டாத அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் – மின்சார வாரியம் அதிரடி சோதனை

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (15:56 IST)
சென்னை ராயபுரம் மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் கட்டணம் கட்டாமல் ஏமாற்றியவர்கள் குறித்த சோதனையில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மின்கட்டணம் கட்டாமல் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக பலர் மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும், பலர் பயன்படுத்திய மின்சாரத்திற்கு உரிய தொகையை செலுத்தாமல் ஏமாற்றி வருவதாகவும் புகார்கள் இருந்தது. ராயபுரம் மின்வாரிய அலுவலகத்தில் புதிதாக இணைந்த மதிப்பீட்டு அலுவலர் இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் மின்சாரத்தை உபயோகித்துவிட்டு அதற்கு உரிய கட்டணத்தை கட்டாதவர்கள் பட்டியலை தயார் செய்தனர். இந்த பட்டியலில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் கட்டிடத்துக்கான மின்கட்டணத்தை பல மாதங்களாக கட்டாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மின் கட்டணத்தை பிணைய தொகையுடன் கட்டும்படி மின்சார வாரியம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுபோலவே பல இடங்களில் நகராட்சி கட்டிடங்கள், அம்மா உணவகங்கள் போன்றவற்றில் மின்சார கட்டணம் கட்டாமல் இருப்பதாகவும் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments