Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச கூடாது: யாரை தாக்குகிறார் ஜெயகுமார்?

Webdunia
சனி, 12 மே 2018 (16:56 IST)
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், திமுக சட்டம் ஒழுங்கு பற்றி பேச கூடாது என திமுக ஆட்சியில் நடந்த சில வன்முறை சம்பவங்களை சுட்டிகாட்டி பேசியுள்ளார். 
 
அவர் கூறியது பின்வருமாறு, சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும்.
 
சென்னை சென்ட்ரல் ஜெயிலில் ஜெயிலர் எரித்து கொல்லப்பட்டது, சென்னை சட்டக்கல்லூரி மோதல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மண்டை உடைக்கப்பட்டது, இன்ஸ்பெக்டர் அமைச்சர் முன்னிலையில் கொல்லப்பட்டது இவை எல்லாம் திமுக ஆட்சியில் அரங்கேறியது.
 
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக செயல்படுகிறது. திமுக ஆட்சியில் காவல்துறை செயல்பட முடியாத நிலையில் இருந்தது. திமுக ஆட்சியில் டிசம்பர் 6 வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது என திமுகவை தாக்கி பேசியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments