Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயநிதியின் நெக்ஸ்ட் மூவ் என்ன?? பொலிடிக்கல் டிராமாவை போட்டுடைத்த அமைச்சர்!!

உதயநிதியின் நெக்ஸ்ட் மூவ் என்ன?? பொலிடிக்கல் டிராமாவை போட்டுடைத்த அமைச்சர்!!
, செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (12:34 IST)
உதயநிதியை கட்சிக்குள் முன்னிலைப்படுத்தவே அரசுக்கு எதிராக போராட்டங்கள் என அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். 
 
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 100 இடங்களுக்கு தகுதி பெற்றோர் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது சர்ச்சையானது. 
 
இது குறித்து நடைபெற்ற விசாரணையில் தேர்வர்கள் முறைகேடான வழியில் தேர்ச்சி பெற இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்ததாகவும், மேலும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்ய சொல்லியும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 
webdunia
மேலும் சில மணி நேரங்களிலேயே அழிந்துவிடும் விசேஷ பேனாவை கொண்டு விடைகளை குறித்தது மட்டும் அல்லாமல், அந்த மையங்களில் பணியில் இருந்த நபர்களுடன் இணைந்து இடைத்தரகர்களும் சரியான பதிலை குறித்து மற்ற தாள்களுடன் இணைத்துள்ளனர். 
 
இதனை தொடர்ந்து மோசடி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களையும் இனி ஆயுளுக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை தேர்வு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின்.  
webdunia
சென்னை மெரினாவில், பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதைக் கண்டித்து, டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.  
 
அதன் படி இன்று இந்த போராட்டமும் நடைபெற்றது. இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் முன்னிலைப்படுத்துவதற்காகவே டி.என்.பி.எஸ்.சி.யைக் கண்டித்து திமுக இளைஞர் அணி அணி போராட்டம் நடத்துகிறது என தெரிவித்துள்ளார். 
 
ஜெயகுமார் கூறுவது போல அடுத்து மேயர் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வைக்க இப்போதே தலைமை தனிப்போராட்டங்களை கையில் எடுக்க சொல்லி ஆயத்தப்படுத்தி வருகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையில் தூங்குபவர்களை கொல்லும் சைக்கோ! – சேலத்தில் அதிர்ச்சி!