Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறிய அமைச்சரின் அந்தர் பல்டி

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (22:16 IST)
அதிமுக ஆட்சி குறித்து தவறாக விமர்சனம் செய்பவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று பேசிய அமைச்சர் துரைக்கண்ணு இன்று அந்தர்பல்டியாக நாக்கு அழுகிவிடும் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அறுத்துவிடுவேன் என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நேற்று தஞ்சையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, ‘‘தமிழகத்தில் ஊழலைக் கண்டுபிடித்ததே திமுக தான். உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது திமுக. அதிமுக அரசை பற்றி யாராவது தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்' என்று ஆவேசமாக பேசினார்.

ஒரு அமைச்சர் இவ்வாறு வரம்பு மீறி பேசியது குறித்து அனைத்து தரப்பினர்களிடம் இருந்து கண்டனக்குரல் எழுந்தது. அதிமுக அமைச்சர் ஜெயகுமார் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களும்  அமைச்சர் அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று கூறினர்

இதனையடுத்து தமிழக அரசை பற்றி யாரேனும் குற்றம் சொன்னால், அவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று கூறுவதற்கு பதிலாக நாக்கை வெட்டிவிடுவேன் என தவறுதலாக கூறிவிட்டதாக அமைச்சர் துரைக்கண்ணு அந்தர் பல்டி அடித்திருக்கிறார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழருடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments