Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் பெண்களின் பிணத்திற்கு பிரேத பரிசோதனை: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (21:26 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு பெண்களின் உடல்களை நடுரோட்டில் பிரேத பரிசோதனை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சமிபத்தில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அந்த பெண்களின் உடல்களை மருத்துவமனைக்கு உள்ளே கொண்டு செல்லாமல் நடுரோட்டில் வைத்து ஒருசில நிமிடங்களில் இரண்டு பெண்களின் உடல்களுக்கு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இதனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்த மருத்துவமனைக்கு வந்த ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக  வலைத்தளங்களில் பதிவு செய்தார். இந்த புகைப்படம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய அந்த பகுதியின் மாவட்ட கூடுதல் ஆட்சியர், செய்திகளில் வெளியானவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments