Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை முதல் அமலாக்கத்துறை சோதனை: முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

Siva
வெள்ளி, 3 ஜனவரி 2025 (12:08 IST)
இன்று காலை முதல், அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதை அடுத்து, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உடன் அமைச்சர் துரைமுருகன் அவசர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பி ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில், அந்த வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சருடன் ஆலோசனை முடிந்த பிறகு, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 560 கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியல்.. இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர்கள் பணியில் தொடர வேண்டுமானால் தகுதி தேர்வு கட்டாயம் வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பிய நீதிமன்றம்

இனிமேல் Swiggy, Zomato இல்லை. சொந்த செயலியை தொடங்கிய ஹோட்டல்கள் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments