Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 23 April 2025
webdunia

காதை புண்ணாக்கி கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில்!

காதை புண்ணாக்கி கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில்!

Advertiesment
அமைச்சர்
, வெள்ளி, 6 அக்டோபர் 2017 (10:02 IST)
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் தனியார் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறி வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்க்கரை நோய் மற்றும் காது புண் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
 
அமைச்சருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அச்சப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காதில் மருந்து போட்டு 2 மணி நேரம் மருத்துவமனையிலேயே ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள்.
 
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பட்ஸ் வைத்து தனது காதை சுத்தப்படுத்தியபோது காதில் புண்ணாகிவிட்டதாம். இதனால் தான் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதாக அவரது வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ஜெய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி!