Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலெக்டர் முன்னிலையில் அமைச்சர்-திமுக எம்.எல்.ஏ மோதல்: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (15:27 IST)
அதிமுக, திமுகவினர்களுக்கு இடையே காலங்காலமாக மோதல்கள், கண்டன அறிக்கைகள், குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் ஆகியவை தினமும் நடந்து வருவது தமிழகத்தில் வழக்கமான ஒன்று ஆகும். எந்த கட்சிகள் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுகவும் திமுகவும் மட்டும் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு இரு கட்சிகளும் எதிர்க்கட்சிகளாக மட்டுமின்றி எதிரிக்கட்சிகளாகவும் உள்ளது
 
இந்த நிலையில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் திடீரென அதிமுக-திமுக இடையே பெரும் மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமார் இடையே முதலில் கடும் வாக்குவாதம் ஏர்பட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடந்த இந்த வாக்குவாதம் பின்னர் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஆகும் அளவுக்கு சீரியஸ் ஆனதாகவும், இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஒரு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒரு அமைச்சரும் எம்.எல்.ஏவும் மோதிக்கொள்வதை அநாகரீகமானது என்று அந்த பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments