Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளி மாணவர்கள் நிலமை என்ன? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (12:25 IST)
கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட பள்ளியில் படித்த மாணவர்களின் நிலைமை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதற்கிடையே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளி பேருந்துகள் எரிக்கப்பட்டதுடன், பள்ளியும் சூறையாடப்பட்டது.

இதுகுறித்த விசாரணைகள், கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் “கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களை அருகேயுள்ள அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்று ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் கள்ளக்குறிச்சி சென்று ஆய்வு நடத்த உள்ளேன்.

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி இறப்பு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

பதிலடி கொடுக்கா விட்டால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. ஜோதிமணி எம்பி

அடுத்த கட்டுரையில்
Show comments