Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் இரு பயணிகள் ஒருவருக்கொருவர் மோதல்.. சென்னை விமானத்தில் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 27 ஜனவரி 2025 (10:08 IST)
கொச்சியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பயணிகள் இருவர் ஒருவர் ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் உடனடியாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 171 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கேரளாவை சேர்ந்த ஒரு பயணிக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பயணிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு, வெடிகுண்டு வீசுவதாகவும் மிரட்டல் எடுத்துக் கொண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமான பயணிகள், இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்கள் கொடுத்தனர். இதனை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் அதிரடி படை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தவுடன் அந்த விமானம் ஒதுக்குப்புறமான இடத்தில் தரையிறக்கப்பட்டது.

அதன் பின், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி ரகளை செய்த இரண்டு பயணிகளையும் சோதனை செய்தனர். சோதனைக்கு பின்னர், அவர்களிடம் எந்த விதமான வெடிபொருட்களும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே விமானத்தில் இருந்து இறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.

நடுவானில் இரண்டு பயணிகள் மோதிக் கொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments