Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாதவிலக்கு நாட்களில்...கருப்பையை அகற்றி கொள்ளும் பெண்கள் ... ராமதாஸ் டுவீட்

மாதவிலக்கு நாட்களில்...கருப்பையை அகற்றி கொள்ளும் பெண்கள் ... ராமதாஸ் டுவீட்
, வியாழன், 26 டிசம்பர் 2019 (14:15 IST)
மராட்டிய மாநிலத்தில் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்யும் பெண்கள் மாதவிலக்கு நாட்களில்  கூலி இழப்பை தவிர்க்க தங்களின் கருப்பையை அகற்றிக் கொள்வதாக அம்மாநில அமைச்சர் கூறியிருந்தார். இது இந்தியாவில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 
இதுகுறித்து பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், மராட்டியத்தில் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க கரும்பு வெட்டும் பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றி கொள்வதாக அம்மாநில அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய கொடுமைகளை தடுக்க பெண் தொழிலாளர்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அரசு ஓய்வுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும்! என கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ஹேமந்த் சோரன்: அகில இந்திய தலைவராகும் திமுக தலைவர்!