Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் அருகே மேட்டுமருதூர் காமன் கோயில் திருவிழா

Advertiesment
Mettumaruthur
, புதன், 27 மார்ச் 2019 (21:02 IST)
கரூர்  மாவட்டம்., குளித்தலை  அருகே  மேட்டுமருதுர்  கிராமம்  உள்ளது. இந்த பகுதியில் சுற்று வட்டாரங்களில்  இந்த  ஊரில்  மட்டும்  தான்  காமனுக்கு (மன்மதன்) கோவில்  உள்ளது  என  சிறப்பு வாய்ந்த  ஊராகும்.  
கடந்த ஏழு ஆண்டுகளாக  இந்த  காமன்  திருவிழா  நடைபெறாமல்  இருந்த  நிலையில்  கடந்த  வாரம்  மாசி 20ம் நாள் தொடங்கிய இத்திருவிழாவில் மன்மதனை தீயில் இட்டு கொழுத்திய பின்  ஒப்பாரி  வைத்து அழுவதும், அதன்பிறகு மூன்றாம் நாள் சிவனின் அருளால் அவர் உயர்தெழுவார் என்று  ஐதீகதம்  அதை  கொண்டாடும் வகையில்  பெண்கள்  அரிசி  மாவினால்  செய்ப்பட்ட  மாவு விளக்கு  கொண்டு வாழைப்பழம்,  தேங்காய்  கொண்டு  காமன் கோவில்  முன்பு  வைத்து படைத்து விட்டு  சாமி  தரிசனம்  செய்வர்.  
 
மன்மதனை  வணங்குவதால்  நம்மேல்  பிறர் கொண்டுள்ள  பகை,  வன்மம்,  குரோதம்  யாவும்  தீயிலிட்ட  பஞ்சு  போல் விலகிப்  போகும்  என  பக்தர்கள்  நம்பி  வழிபட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்ட் நம்பர் இல்ல; சிவிவி இல்ல.. ஃபைன் இல்ல: புதுவித கிரெடிட் கார்ட் அறிமுகம்!