Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (08:00 IST)
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இரவு திடீரென சென்னையில் முக்கிய பகுதிகளில் பெய்த மழையால் சென்னை நகரமே குளிர்ச்சி அடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும் இன்று மழை பெய்யும் என்றும் குறிப்பாக அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் திருவொற்றியூர் பகுதியில் மழை பெய்யும் என்றும் செங்கல்பட்டு, குன்றத்தூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆலந்தூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம் , கும்மிடிப்பூண்டி, வண்டலூர் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை  பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்கப்பட பகுதியாக மத்திய அரசு அறிவிப்பதற்கு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு!