Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 3 மணி 10 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

rain
, சனி, 14 மே 2022 (08:22 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அசானி புயல் கரையை கடந்தாலும் அதன் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் திருச்சி சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதன் காரணமாக கோடை வெப்பத்திலிருந்து மக்கள் தப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

52 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!