Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடை பிடித்து வந்தால் மட்டுமே டாஸ்மாக்கில் சரக்கு! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

குடை பிடித்து வந்தால் மட்டுமே டாஸ்மாக்கில் சரக்கு! மாவட்ட நிர்வாகம் அதிரடி!
, செவ்வாய், 5 மே 2020 (17:35 IST)
திருப்பூரில் குடை பிடித்து சமூக இடைவெளிக் கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் ஆல்கஹால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் சமூக இடைவெளியை ஒழுங்காக கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் சமூக இடைவெளியைக் கடைபிடித்து குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுபான கடைகளை திறப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் - விஜயகாந்த்