Publish Date: Tue, 10 Apr 2018 (11:23 IST)
Updated Date: Tue, 10 Apr 2018 (11:28 IST)
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதற்காக போராடும் அரசியல் கட்சிகள் அந்த பிரச்சனையை தீர்க்காமல், அதை தீவிரமாக்கி அதில் குளிர் காய்ந்து வருவதையே கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக ஐபிஎல் போட்டியை நிறுத்துங்கள் என்று ஒருசிலரும், காவிரி பிரச்சனை தீரும் வரை திரைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்துங்கள் என்று இன்னொரு தரப்பினர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நெட்டிசன்கள் காவிரி பிரச்சனை தீரும் வரை என்னென்ன செய்யலாம் என்று பதிவு செய்துள்ள மீம்ஸ்களால் சமூக வலைத்தளங்கள் பரபரப்பில் உள்ளது. அவர்கள் கூறிய ஐடியாக்கள் இதுதான்:
காவிரி பிரச்சனை தீரும் வரை யாரும் மது குடிக்க கூடாது என்று முடிவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடலாம்
காவிரி பிரச்சனை தீரும் வரை தொலைக்காட்சிகள் அனைத்து விளம்பரமே இல்லாமல் ஒளிபரப்பு செய்யலாம்
காவிரி பிரச்சனை தீரும் வரை சம்பளமே வாங்காமல் நடித்து தருவதாக முன்னணி நடிகர்கள் முடிவெடுக்கலாம்