Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகம் முழுவதும் இலவச ஆக்ஸிஜன் படுக்கைகள்! – மாநில அரசுகளுடன் இணைந்து உதவும் மேகா!

தமிழகம் முழுவதும் இலவச ஆக்ஸிஜன் படுக்கைகள்! – மாநில அரசுகளுடன் இணைந்து உதவும் மேகா!
, வியாழன், 27 மே 2021 (14:11 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நிலையில் மாநில அரசுகளுடன் இணைந்து ஆக்ஸிஜன் படுக்கைகள் நிறுவுவதில் மேகா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா கொடிய நோய் பரவி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசாங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ அந்த மாநில அரசாங்கங்கள் உடன் கைகோர்த்துள்ளது   ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (MEIL) நிறுவனம். இந்த நிறுவனம்  இப்போது தமிழகம் முழுவதும் 2,500ம் அதிகமாக  இலவச கொரோனா படுக்கைகளை அமைத்து வருகிறது.  ஏற்கனவே இதில் 660 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 

முக்கியமாக சென்னை மற்றும் மதுரை மற்றும் பிற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதிகள் உள்ளன. இதில் ஒரு பகுதியாக, மதுரையில் வெறும் 72 மணி நேரத்தில் 500 ஆக்ஸிஜன் படுக்கைகளை அமைத்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மையங்களில் அரசு சிகிச்சை அளித்து வருகிறது.

ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் டேங்கர்கள், படுக்கைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வருகிறது MEIL.
webdunia

மேகா பொறியியல் உள்கட்டமைப்பு இயக்குனர் பி. சீனிவாஸ் ரெட்டி கூறுகையில், "கடினமான காலங்களில் மக்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், 2500 படுக்கைகள் கொண்ட ஆக்சிஜன் படுக்கை மருத்துவமனைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டது. வெறும் 72 மணி நேரத்தில், மதுரையில் 200 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தடுக்க 200 PSA ஆலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பி.சீனிவாஸ் ரெட்டி தெரிவித்தார்.

கிரையோஜெனிக் தொட்டிகளின் உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதற்கு DRDO மற்றும் பெட்ரோலிய அமைச்சகங்கள் முழு ஒத்துழைப்பு  அளித்து வருகின்றன என்று அவர் விளக்கினார். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே ஆக்ஸிஜன் இலவசமாக வழங்கப்பட்டது அவர் நினைவு கூர்ந்தார். முதல் முறையாக, 11 கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்கர்கள் தாய்லாந்திலிருந்து தெலுங்கானாவுக்கு இறக்குமதி செய்து இலவசமாக வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!