Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 கோடி இலக்கை எட்டுமா நாளைய மெகா தடுப்பூசி முகாம்?

2 கோடி இலக்கை எட்டுமா நாளைய மெகா தடுப்பூசி முகாம்?
, சனி, 7 மே 2022 (12:32 IST)
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் 2 கோடி பேரை இலக்காக வைத்து நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

 
நிறுத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்: 
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73% பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என தமிழக அரசு சார்பில் முன்னர் அறிவிக்கப்பட்டது. 
 
மீண்டும் துவங்கும் மெகா தடுப்பூசி முகாம்: 
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மே மாதம் 8 ஆம் தேதி முதல் மீண்டும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுநாள் வரை நடந்தது போல இனியும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 
 
2 கோடி தடுப்பூசிகள் இலக்கு: 
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் செலுத்தப்படுகிறது. 2 கோடி பேரை இலக்காக வைத்து முகாம் நடத்தப்படுகிறது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முகாம் நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 47 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி?