Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காலத்தில் அசத்திய நெல்லை துணை ஆணையருக்கு பதக்கம்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (11:31 IST)
நெல்லை துணை ஆணையருக்கு பதக்கம்!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த போதிலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அந்த மாவட்டத்தின் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் உள்ளது 
 
அந்த வகையில் நெல்லை சட்ட ஒழுங்கு காவல் துறை ஆணையர் சரவணன் அவர்களின் தீவிர முயற்சி காரணமாக நெல்லையில் படிப்படியாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாஸ்க் அணிவதன் அவசியம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது குறித்து அவ்வப்போது நெல்லை சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சரவணன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார் என்பதும் இந்தப் பதிவுகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நெல்லை சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையர் சரவணன் அவர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. மேலும் சேலம் எஸ்பி தீபா கணிகர், மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜெகன்நாத் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments