Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை ! - ஆவின் நிர்வாகம்

Webdunia
திங்கள், 4 மே 2020 (20:26 IST)
சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது.இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது.  இங்கு வந்து சென்றவர்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், சென்னை மாதத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பால்பண்ணையில் உள்ள பாக்கிங் செக்சனில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு மொத்தம் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மற்ற பணியாளர்கள் வேலைக்கு வர மறுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் வெளியாகிறது.

இதுகுறித்துஆவின் நிர்வாகம் கூறியுள்ளதாவது :

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை தவிர்க்க, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், ஆகிய இடங்களில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments