Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஸ் ஹவுஸ் பகுதியில் 20 பேருக்கு கொரோனா: அம்மா உணவக ஊழியராலா?

ஐஸ் ஹவுஸ் பகுதியில் 20 பேருக்கு கொரோனா: அம்மா உணவக ஊழியராலா?
, திங்கள், 4 மே 2020 (14:45 IST)
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி உள்ளது. 
 
நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 
 
இத்னைத்தொடர்ந்து தற்போதைய தகவலின் படி சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 20 பேருக்கு அம்மா உணவக ஊழியரால் கொரோனா பரவியதா என உறுதிப்படுத்தபடவில்லை என்றாலும் அப்பகுதி மக்களுக்கு இது பீதியை கிளப்பியுள்ளது. 
 
மேலும், கொரோனா பாதிக்கப்பட்டுள்ள அம்மா உணவக ஊழியர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாத்தியா..! அண்ணன் இப்பவே ஆரம்பிச்சிட்டாரு! – சரக்கு கிடைத்த களிப்பில் மதுவிரும்பிகள் #WebViral