Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது..

Webdunia
திங்கள், 4 மே 2020 (19:44 IST)
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தனியில் யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சியுள்ளனர்.ல் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரியவே அவர்களைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது.இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுபானக் கடைகளை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பலர் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி வருகின்றனர்.
திருவள்ளுவர் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியில் சாராயம் காய்ச்சி வி்ற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக விரைந்து சென்ற போலீஸார், அங்கு வீட்டில் குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த இளைஞர்களை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments