Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி:வைகோ

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (13:36 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. மதிமுக 8 தொகுதிகள் கேட்டதாகவும் ஆனால் 5 தொகுதிகள் வரை தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. அதுவும் அந்த ஐந்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக நிபந்தனை வைத்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் செய்தியாளர்களிடம் கூறிய வைகோ, வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று கூறினார்
 
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் தனி சின்னத்தில் போட்டி என வைகோ தெரிவித்துள்ளது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments