Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த அரசியல்வாதிகள் சிலைகளை மறைக்க வேண்டாம்! – தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (13:16 IST)
தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மறைந்த அரசியல்வாதிகள் சிலைகளை மறைக்க வேண்டாம் என சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், சுவர் விளம்பரங்கள் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மறைந்த முன்னாள் அரசியல்தலைவர்கள் சிலைகளை மறைக்க அவசியமில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படைகள், 3 நிலை கண்காணிப்பு குழு, வீடியோ குழு, கணக்கெடுப்பு குழு செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments