மறைந்த அரசியல்வாதிகள் சிலைகளை மறைக்க வேண்டாம்! – தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (13:16 IST)
தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மறைந்த அரசியல்வாதிகள் சிலைகளை மறைக்க வேண்டாம் என சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், சுவர் விளம்பரங்கள் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மறைந்த முன்னாள் அரசியல்தலைவர்கள் சிலைகளை மறைக்க அவசியமில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படைகள், 3 நிலை கண்காணிப்பு குழு, வீடியோ குழு, கணக்கெடுப்பு குழு செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 நாட்கள் தொடர் பிரச்சாரம்!.. அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்!..

முதல் நாடு!.. எரிபொருள் தட்டுப்பாடு!.. எமர்ஜென்ஸியை அறிவித்த பிலிப்பைன்ஸ்!...

மதம் மாறியவர்களுக்கு பட்டியலின சலுகைகள் கிடையாது: உறுதி செய்த உச்சநீதிமன்றம்.!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முதல் அயோத்தி ராமர் கோவில் வரை.. IRCTCயின் ஆன்மீக சுற்றுலா ரயில்..

பெரம்பூரில் பிரச்சாரம்!.. 27ம் தேதி தவெக வேட்பாளர்கள் கூட்டம்!.. வேகமெடுக்கும் விஜய்!...

அடுத்த கட்டுரையில்
Show comments