Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மந்திரி சொல்றான், மயிறு சொல்றான்னு மக்களை அடிக்காதீங்க.... மயில்சாமி ஆவேசம்

மந்திரி சொல்றான், மயிறு சொல்றான்னு மக்களை அடிக்காதீங்க.... மயில்சாமி ஆவேசம்
, செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (19:24 IST)
மந்திரி சொல்றான், மயிறு சொல்றான்னு அடிக்காதீங்க. மக்கள் கொந்தளித்து திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலும் தாங்க முடியாது என மயில்சாமி கூறியுள்ளார்.


 

 
திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை காவல்துறையினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் ஒரு பெண்ணைக் கன்னத்தில் அறைகிறார், இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
இதுகுறித்து நடிகர் மயில்சாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
காடுமிராண்டிதான் இப்படி செய்வான், மனிதனாக இருப்பவன் இவ்வாறு செய்ய மாட்டான். மதுக்கடையை திறக்க கூடாது என்றுதான் மக்கள் போராடினார்கள். பெண்களை தலையில் முடி இல்லாத போலீஸ்காரர் அடிக்கிறார். அப்பெண்ணைத் தாக்க அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
 
மந்திரி சொல்றான், மயிறு சொல்றான்னு அடிக்காதீங்க. மக்கள் கொந்தளித்து திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலும் தாங்க முடியாது. மக்களை நிம்மதியா இருக்க விடுங்க, மக்களை தொந்தரவு பண்ணாதீங்க, என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகாரிகளுக்கு கிடைத்த புதிய தகவல் - சரத்குமார் வீட்டில் மீண்டும் சோதனை