Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

Mahendran
திங்கள், 17 ஜூன் 2024 (12:33 IST)
சமீபத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் அடித்து நொறுத்தப்பட்ட நிலையில் சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்த செய்வோம் என அக்கட்சியின் கே கோபாலகிருஷ்ணன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டியில் ’சாதி மறுப்பு திருமணங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம், நாங்கள் யாரையும் கடத்திக் கொண்டு சென்று திருமணம் செய்து வைக்கவில்லை, எங்களை நாடி வந்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்து எங்கள் கடமையை செய்கிறோம்’ என்று தெரிவித்தார்.
 
மேலும் என்றைக்கும் இந்த கடமையை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்றும், சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு உற்ற பாதுகாப்பு கேடயமாக மார்க்கெட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இந்த பேட்டிக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது. யாரோ பெற்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க நீங்கள் யார் என்றும் சாதி மறுப்பு திருமணத்தை செய்து வைக்க நீங்கள் விரும்பினால் இருதரப்பு பெற்றோரிடமும் பேசி அவர்களுடைய சம்மதத்துடன் திருமணம் செய்து வையுங்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று விளக்கம் அளிக்கிறது இந்திய ராணுவம்..!

ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!

சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பகல்ஹாம் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது: ஒவைசி

அடுத்த கட்டுரையில்
Show comments