Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல மாதங்களாக மூடப்பட்ட மெரினா திறப்பு! – புத்தாண்டுக்கு ரெடியாகும் மக்கள்!

பல மாதங்களாக மூடப்பட்ட மெரினா திறப்பு! – புத்தாண்டுக்கு ரெடியாகும் மக்கள்!
, ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (14:04 IST)
கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மெரினா கடற்கரை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரொனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல கடற்கரைகள் மூடப்பட்டன. இதனால் கடற்கரை செல்லும் பாதைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. தற்பொது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

கடற்கரையில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவும், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கடற்கரை திறக்கப்படுவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை கடற்கரையில் கொண்டாட மக்கள் ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகம் முழுவதும் அதிக ப்ளாஸ்டிக் மாசு! – டாப் லிஸ்டில் உள்ள நிறுவனங்கள்!