Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை… சேதாரம் இவ்வளவு கோடியா?

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (10:55 IST)
மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த சென்னையின் சேதார மதிப்பு முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை உருவாக்கிய நிலையில் முதல் கட்ட ஆய்வில் சேதத்தின் மதிப்பு சுமார் 700 கோடி ரூபாய் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் சாய்வு, கட்டிடங்கள், தார் சாலைகள் பாதிப்பு என மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது மாண்டஸ்.

இதில் 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், 15க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களும் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்த  கட்ட ஆய்வுகளில் சேதார மதிப்பு மேலும் துல்லியமாக தெரியவரும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments