Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலி வேலைக்கு சென்ற தாய்… வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு உறவினர் பாலியல் தொல்லை – அதைவிட கொடுமை?

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (11:39 IST)
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவருக்கு உறவினரே பாலியல் தொல்லைக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருப்பூரில் கூலி வேலை செய்த நிலையில் இப்போது கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊரிலேயே இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் உறவினர் பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்றுவருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் கணவர் திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போக அந்த குழந்தையின் தாய் மருத்துவமனைக்கு செல்ல உதவிக்கு மணிகண்டனை அழைத்துள்ளார். இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதனை செய்ததில் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது பற்றி குழந்தையிடம் விசாரணை நடத்தியதில் ‘மணிகண்டன் மாமாதான் கடைக்கு போகலாம் என அழைத்துச் சென்று இப்படி செய்துவிட்டார்’ எனக் கூறியுள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் போலிஸில் புகாரளிக்க போக்ஸோ சட்டத்தில் அவரை கைது செய்துள்ளனர். பாலியல் தொல்லைக் கொடுத்ததும் இல்லாமல் குழந்தையோடு மருத்துவமனைக்கும் மணிகண்டன் சென்றிருப்பது மேலும் கோபத்தை அவர் மேல் வரவழைக்கும் விதமாக அமைந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்