Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர் – வீட்டுக்கு வரவழைத்து தர்ம அடி!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (16:54 IST)
சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக வீடியோ மெஸேஜ்களை அனுப்பிய நபரை வீட்டுக்கு வரவழைத்து போலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அந்த பெண் கணவரை பிரிந்து தன் தாய்வீட்டில் வாழ்பவர். அந்த பெண்ணுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபரிடமிருந்து கடந்த 4ஆம் தேதி முதல் அழைப்புகளும், வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோக்களும் வெவ்வேறு நம்பர்களில் இருந்து வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன் தாயாரிடம் இதுபற்றி சொல்லியுள்ளார்.

அவரது தாயார் மர்மநபரை எப்படியாவது பிடிக்க வேண்டும் என அந்த நபரை வீட்டுக்கு வரும்படி சொல்லுமாறு தன் மகளுக்கு சொல்லியுள்ளார். அதன்படியே அந்த மகள் சொல்ல, அந்த நபரும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மறைந்திருந்து அவரைப் பிடித்து தர்ம அடி அடித்து போலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையில் அவர் திருத்தணியை சேர்ந்த விமல்ராஜ் என்பதும் ஆன்லைனில் உணவு விநியோகம் செய்பவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments