Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் சரக்கைப் பிரிப்பதில் சிக்கல் – மனைவியைக் கொலை செய்த கணவன்!

Webdunia
புதன், 20 மே 2020 (07:15 IST)
டாஸ்மாக் கடையில் வாங்கி வந்த சரக்கு பாட்டில்களைப் பங்கிட்டுக் கொள்வதில் சிக்கல் எழுந்த நிலையில் மனைவியைக் கணவனேக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 42 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில் மே 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் திறக்கப்பட்டது. அதையடுத்து கடைகள் மூடப்பட்ட நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் அடித்து பிடித்து டோக்கன் வாங்கி சரக்குகளை வாங்கி செல்கின்றனர்.

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இதுபோல மாணிக்கம் 6 குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். மாணிக்கத்தின் மனைவி பழனாளுக்கும் குடிக்கும் பழக்கம் இருந்ததால் இருவரும் சரக்கைப் பங்கு பிரிக்க ஈடுபட்ட போது மாணிக்கம் தனக்கு 4 பாட்டில்களை எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை உருவாக கட்டையால் மனைவியைத் தாக்கியுள்ளார். மேலும் சுவற்றில் தலையை மோதி அவரைக் கொன்றுள்ளார். இதையறிந்த போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments