Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் பெரியப்பாவின் பிணத்தோடு தூங்கிய நபர் – கொலை செய்தது யார் தெரியுமா ?

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (08:08 IST)
குடிப்பழக்கத்தை நிறுத்த சொன்ன தனது பெரியப்பாவைக் கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு அவரது சடலத்தோடே தூங்கியுள்ளார் ஒரு நபர்.

தேனி மாவட்டம் சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் பெத்தண்ணசாமி. இவரின் தம்பியின் மகன் கனகவேல் ஐய்யப்பன். குடிக்கு அடிமையாக இருந்த கனகவேலை திருத்த எவ்வளவோ முயற்சிகள் எடுத்துள்ள பெத்தண்ணா. ஆனால் கனகவேல் குடியை நிறுத்தவில்லை. இது சம்மந்தமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினமும் வழக்கம்போல கனகவேல் குடித்துவிட்டு வர பெத்தண்ணசாமி அவரைக் கடுமையாக திட்டியுள்ளார். போதையில் இருந்த கனகவேல், உருட்டுக் கட்டையை எடுத்து பெத்தண்ணசாமியைத் தாக்கியுள்ளார். இதில் பெத்தண்ணசாமி மயங்கி விழுந்து இறந்துள்ளார். ஆனால் போதையில் அதுகூட தெரியாமல் கனகவேல் படுத்து உறங்கியுள்ளார்.

வழக்கம்போல காலையில் எழுந்து பெரியப்பாவைப் பார்த்தபோதுதான் அவர் இறந்தது தெரிந்துள்ளது. கொலைக்கு தாம்தான் காரணம் என உணர்ந்ததும் நேராக போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments