Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமாவுக்கு திதி கொடுப்பதில் வாக்குவாதம்… அத்தையைக் குத்தி கொன்ற இளைஞர்!

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (10:07 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு முன் இறந்த மாமாவுக்கு திதி கொடுப்பதில் அத்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரைக் குத்தி கொலை செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் வசித்து வந்த செல்வமுருகன், தாலுகா அலுவலகத்தில் தனிக்காவலராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து அவரின் மனைவி அருணா தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் செல்வ முருகனின் அக்கா மகனான முத்துக்குமார் நேற்று அவரின் மறைவு நிகழ்ந்து ஒரு ஆண்டு ஆனதை அடுத்து திதி கொடுக்க வேண்டும் என அத்தையிடம் சொல்லியுள்ளார். ஆனால் அருணாவோ இரு தினங்களுக்கு முன்பாகவே மகன்களை வைத்துக் கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. கோபத்தில் முத்துக்குமார் அருணாவைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட, போலிஸாருக்கு தகவல் செல்ல அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments