Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் விலையை 35 ரூபாய்க்கு குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது… அண்ணாமலை பேச்சு!

பெட்ரோல் விலையை 35 ரூபாய்க்கு குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது… அண்ணாமலை பேச்சு!
, சனி, 2 அக்டோபர் 2021 (09:39 IST)
இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தலையில் பெரும் பாரமாக இருக்கிறது. இது ஆளும் பாஜக அரசின் மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாகதான் இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் போது ‘பொதுமக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள் என்ற கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை ‘பெட்ரோல் விலையை 35 ரூபாய்க்கு குறைக்க கூட தயாராக இருப்பதாக பேசினார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால் பாதியிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்றுவிட்டாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காந்தியின் 153 ஆம் பிறந்த நாள்: நினைவில் வந்து போகும் அஹிம்சை போராட்டங்கள்...