Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (13:34 IST)
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 
சென்னையில் கனமழை பெய்த நிலையில் டிபி சத்திரம் கிறிஸ்தவ கல்லறை ஒன்றில் மரம் சாய்ந்ததில் அங்கு தங்கியிருந்த நபர் காயமடைந்துள்ளார். அவர் மயக்கமடைந்து மரத்தின் அடியிலேயே கிடந்துள்ளார்.
 
மரத்தை அகற்றியபோது அவருக்கு மூச்சு இருப்பதை பார்த்த அண்ணா நகர் பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உடனே அந்த இளைஞரை தன் தோளில் தூக்கி ஓடினார். அங்கிருந்த ஆட்டோவை வர செய்து அதில் இளைஞரை வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 
அவர் இளைஞரை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை நேரில் பாராட்டி அவருக்கு சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.
 
இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments