Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

500 ரூபாய்க்கு வார வட்டி 50 ரூ – திருச்சியில் கடன் வாங்கி குடித்த மதுப்பிரியர்!

500 ரூபாய்க்கு வார வட்டி 50 ரூ – திருச்சியில் கடன் வாங்கி குடித்த மதுப்பிரியர்!
, சனி, 16 மே 2020 (15:01 IST)
திருச்சியில் புத்தூர் நால்ரோடு டாஸ்மாக் கடையில் இன்று மது வாங்க ஒருவர் கடன்வாங்கி சரக்கு வாங்கி சென்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்ட மதுக்கடைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என மூட உத்தரவிடப்பட்டன. தமிழக அரசின் மேல் முறையீட்டின் காரணமாக மதுக்கடைகளை திறப்பதன் மீதான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம். அதனால் இன்று முதல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மதுக்கடைகளில் மது வாங்க டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. அதன்படி காலையிலேயே மதுக்கடைகளில் வந்து குவிந்த மதுப்பிரியர்களுக்கு கிழமை வாரியாக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே மதுபான விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதிக்கு வந்த சுரேஷ் எனும் மதுப்பிரியர் குடிக்க காசு இல்லாததால் 500 ரூபாய் தந்தால் ஒரு வாரத்துக்கு 50 ரூபாய் வட்டியாக தருவதாக சொல்லி கடன் வாங்கி மது வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனக்கு இப்போது வேலை இல்லாததால் இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 ஜிபி டேட்டா: பிரீபெயிட் சலுகையை அறிவித்த ஜியோ!!!