ரயில் எஞ்சின் மேலேறி போராட்டம் செய்த இளைஞர்… ஜோலார்பேட்டையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (11:09 IST)
ஜோலார் பேட்டையில் ஹவுரா செல்லும் ரயில் நிற்கும் போது அதன் எஞ்சின் பெட்டியின் மேலேறி ஒருவர் போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்திற்கு வந்து நின்ற போது பிளாட்பார்மில் இருந்த நபர் ரயில் எஞ்சின் பெட்டி மேல் ஏறி உட்கார்ந்துகொண்டார். அவரை எவ்வளவோ வற்புறுத்தியும் இறங்காததால் ரயில்வே ட்ராக் மேல் இருந்த மின்சாரம் நிறுத்தப்பட்டு பின்னர் ரயில்வே போலிஸார் வந்து கீழே இறக்கினர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மூன்றாம் வகுப்பு டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் பயணம் செய்ததால் பரிசோதகர் அவருக்கு அபராதம் விதித்தாலும், அவரிடம் ஊருக்கு செல்ல காசு இல்லாததால் இதுபோல செய்ததாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி ரோட் ஷோ நடத்தினால் திமுகவுக்கு குஷிதான்!. முக ஸ்டாலின் நக்கல்!..

ஒழுங்கா ஓட்டுப்போடு!.. என் பாவம் சும்மாவிடாது!.. சாபம் விட்ட சீமான்..

இயேசுவின் அடக்க துணியில் இந்திய டி.என்.ஏ!.. ஆய்வில் ஆச்சர்ய தகவல்...

600 கோடி மோசடி!.. தவெக வேட்பாளருக்கு சம்மன்!.. விஜய்க்கு சிக்கல்!...

தனக்கு தானே விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை.. மனைவி கொடுமை காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments