Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (09:32 IST)
சென்னையின் வேளச்சேரி பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சம்பவம் நடந்த அன்று இரவு நேரத்தில், வேளச்சேரியில் உள்ள தனியார் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த அந்த இளைஞர், அறையில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் அலறியதால், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்தவர் வேளச்சேரி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பது தெரிய வந்தது.
 
காவல்துறையினர் லட்சுமணனை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் இதேபோன்று வேறு பல பெண்கள் விடுதிகளிலும் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்.. நேரா குவாண்டம் ஜம்ப்தான்! - பிரதமர் மோடி அதிரடி!

சேலத்தில் பிறந்து 9 நாள் ஆன குழந்தை ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை.. பெற்றோர் மீது வழக்கு..!

தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் கொடுத்த கர்நாடக அரசு! பாஜக எம்.எல்.ஏ கேள்விக்கு பதில்!

பிரதமராகவே இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்! - பிடிவாதமாய் பிரதமர் மோடி செய்த காரியம்!

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்