Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுடியூப் பார்த்து கள்ள நோட்டு அடித்த நபர் – சென்னையில் கைது!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (09:41 IST)
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த இலியாஸ் என்ற நபர் கள்ளநோட்டு அடித்து அதைக் கடைகளில் மாற்றும்போது சிக்கியுள்ளார்.

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள கடை ஒன்றில் நபர் ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கியுள்ளார். அந்த நோட்டு சந்தேகப்படும் படியாக இருந்ததால் போலிஸாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த நோட்டுகளை சோதனை நடத்தியதில் அது கள்ளநோட்டு என்பது உறுதியாகியுள்ளது.

அதையடுத்து சிசிடிவி கேமராக் காட்சிகளை வைத்து அந்த நபரை தேடியதில் அவர் புளியந்தோப்பை சேர்ந்த இலியாஸ் என்பது தெரியவந்துள்ளது. யூடியூபைப் பார்த்து கள்ள நோட்டு அடிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறான்.இதற்கு முன்னதாகவே 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து மாட்டிக்கொண்ட நிலையில் இப்போது 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments