Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபர் அடித்து கொலை.. மெரினாவில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
புதன், 18 ஜூன் 2025 (11:13 IST)
சென்னை மெரினா கடற்கரை நேதாஜி சிலை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் வெங்கடேசன் என்பதும், அவர் கடற்கரையில் வியாபாரம் செய்துவிட்டு அங்கேயே உறங்குபவர் என்பதும் தெரிய வந்தது. அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு திருநங்கை மற்றும் ஓர் இளைஞர் சேர்ந்து வெங்கடேசனை தாக்கி கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
 
முதற்கட்ட விசாரணையில், திருநங்கை மற்றும் ராகேஷ்  இருவரும் மெரினாவில் பேசிக்கொண்டிருந்தபோது, வெங்கடேசன் அந்த திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து உருட்டுக் கட்டையால் வெங்கடேசனை தாக்கியதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக, திருநங்கை மற்றும் ராகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிகழ்வு சென்னை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான பெண்ணின் கள்ளக்காதல்.. அம்மா, பாட்டி, மகள்கள் என 4 பேர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

மீண்டும் ரூ.74,000ஐ தொட்ட தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் எவ்வளவு உயர்ந்துள்ளது?

ஈரான் - இஸ்ரேல் போரால் பங்குச்சந்தைக்கு பாதிப்பா? இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

தங்க நிறத்தில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் டிரம்ப் குடும்ப நிறுவனம்.. கடும் விமர்சனங்களால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்