Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சியில் நாளை பொதுக்கூட்டம் - கமல்ஹாசன் அதிரடி

திருச்சியில் நாளை பொதுக்கூட்டம் -  கமல்ஹாசன் அதிரடி
, செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (17:53 IST)
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் நாளை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

 
கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். அதேபோல், அன்று மதுரையில் முதல் பொதுக்கூட்டத்தையும் கூட்டி, தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார்.
 
அதன்பின் அவர் தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். சமீபத்தில் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடங்கியுள்ள போராட்டத்தில் கலந்து கொண்டார்.
 
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சாரில் நாளை திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து ரயில் மூலம் அவர் திருச்சி புறப்பட்டார்.  அப்போது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்ணாவிரத மேடையில் இருக்கை இல்லை - கரூரில் சலசலப்பு (வீடியோ)