Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

Siva
ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (14:20 IST)
குமரியில் கண்ணாடி இழைப்பாலம் திறந்து சில மாதங்கள் ஆன நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 
 
மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று, விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வருகின்றனர்.
 
இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
திறந்து சில மாதங்களே ஆன  நிலையில், கண்ணாடி இழப்பாலம் பராமரிப்பு பணிக்காக தடை விதிக்கப்பட்ட அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments