Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவுக்கு பயந்து பொதுக்கூட்டம்...? மாஃபா பாண்டியராஜன் பதில்!

சசிகலாவுக்கு பயந்து பொதுக்கூட்டம்...? மாஃபா பாண்டியராஜன் பதில்!
, திங்கள், 11 ஜனவரி 2021 (15:35 IST)
பொது குழு கூடியதற்கும், சசிகலா வருகைக்கும் சம்மந்தம் இல்லை என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

 
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இது குறித்து மாஃபா பாண்டியராஜன் தெரிவித்ததாவது, 
 
பொது குழு கூடியதற்கும், சசிகலா வருகைக்கும் சம்மந்தம் இல்லை. வழக்கத்திற்கு மாறாக இந்தமுறை காலதாமதமாக தான் நடந்துள்ளது. மனதாலும், ஆன்மாவாலும் அதிமுக ஒன்றுப்பட்டு நிற்கிறது. பிரிவினை விதையை யார் தூவினாலும் மக்களால் புறந்தள்ளப்படுவர். 
 
மக்கள் தொடர்புடன் அதிமுக எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது. தமிழகத்தில் 99.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சசிகலா வந்தாலும் வராவிட்டாலும் எந்த தாக்கமும் ஏற்படாது. கடந்த 4 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்ற சாதனையை வைத்து வாக்கு கேட்போம். மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை தருவார்கள் என பேசினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது!