Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெனகை மாரியம்மன் கோவிலில் 13வது ஆண்டாக பூச்சொரிதல் விழா- ஏராளமான பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்தனர்!

ஜெனகை மாரியம்மன் கோவிலில் 13வது ஆண்டாக பூச்சொரிதல் விழா- ஏராளமான பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்தனர்!

J.Durai

, திங்கள், 3 ஜூன் 2024 (11:20 IST)
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வருகின்ற 10ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது தமிழகத்தில் அதிக நாட்கள் அதாவது 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் பூச்சொரிதல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
 
கோவிலில் இருந்து அம்மன் பூ பல்லக்கில் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக  வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி அம்மன் முன்பு சென்றனர் தொடர்ந்து கோவிலின் முன்பு அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது பூ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் தொடர்ந்து 13- ஆவது ஆண்டாக பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படி ஒரு நிலைமை வந்தா அமைச்சரவையே எங்களுக்கு தேவையில்ல?? – துரை வைகோ உறுதி!