Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை எம்ப சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (18:20 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆறு மாதங்களாக இருந்துவரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் உள்பட பல விஐபிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
மேலும் கொரோனாவால் ஜெ அன்பழகன் எம்.எல்.ஏ மற்றும் வசந்தகுமார் எம்பி உள்ளிட்ட ஒருசில விஐபிகள் பலியாகி உள்ளனர் என்பதும் சோகமான செய்தி ஆகும். இந்த நிலையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தோப்பூரில் உள்ள நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
மதுரை எம்பி சு வெங்கடேசன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டுமென மதுரை மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments