தனுஷை மகன் என உரிமை கோரிய முதியவர் உயிரிழப்பு: தனுஷ் இரங்கல் தெரிவிப்பாரா?

Mahendran
சனி, 13 ஏப்ரல் 2024 (12:55 IST)
நடிகர் தனுஷை தனது மகன் என்று உரிமை கோரிய கதிரேசன் என்ற முதியவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது மறைவுக்கு தனுஷ் இரங்கல் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் நடிகர் தனுஷை தனது மகன் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் சிறுவயதில் காணாமல் போன மகன்தான் தனுஷ் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது 
இந்த நிலையில் தனுஷை தனது மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் உடல் நல குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலை உயிரிழந்தார்
 
அவரது மறைவை தனுஷுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் தனுஷ் அதற்கு எந்தவித ரியாக்சனும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் கதிரேசன் மறைவுக்கு தனுஷ் இரங்கல் தெரிவிக்க மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments