Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி பெயரை சொல்லி மாணவியை கிண்டல் செய்த பேராசிரியர் கைது: காமராஜர் பல்கலையில் பரபரப்பு..!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (13:10 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியின் ஜாதியை சொல்லி கிண்டல் செய்த பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளனர். 
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியின் ஜாதி பெயரை அந்த பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் சண்முகராஜா என்பவர் சொல்லி கிண்டல் செய்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அந்த மாணவியின் உருவத்தை வைத்தும் அவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து வரலாற்று உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த சண்முகராஜா என்பவர் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
மாணவியை கிண்டல் செய்ததால் வரலாற்று பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments