Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
, வெள்ளி, 30 ஜூன் 2023 (17:42 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு தற்போது சிபிஐ மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது சிபிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
 
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்  8 முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் சிபிஐ தெரிவித்த சிபிஐ 2 மருத்துவர்கள், ஒரு நீதித்துறை நடுவர், விசாரித்த சிபிசிஐடி  அதிகாரி உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என கூறியதோடு,  2 முதல் 3 மாதம் அவகாசம் கோரப்பட்டது.
 
இந்த நிலையில்  இந்த வழக்கை 3 மாதங்களில் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் கார் வாங்கி கொடுக்கவில்லை. இதுமட்டும் தான் தந்தார்.. ஷர்மிலி தந்தை பேட்டி..!