Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புடிச்சி உள்ள போடுங்க சார்! தப்பியோடும் கொரோனா நோயாளிகள் – பீதியில் மக்கள்!

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (12:58 IST)
கொரோனா முன்னெச்சரிக்கையாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடப்பது ஒரு பக்கம் இருக்க கொரோனா அறிகுறியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் தப்பியோடும் சம்பவம் ஒரு பக்கம் பீதியை கிளப்பியுள்ளது.

இப்படி தப்பியோடும் சம்பவம் கேரளாவில் கொரோனா தொற்று ஏற்பட தொடங்கியபோதே தொடங்கிவிட்டது. அப்போது கேரளாவில் கொரோனா தொற்று இருப்பதாக சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பி மதுரை செல்லும் ரயிலில் தப்பி சென்றதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நாடு முழுவதும் இதுபோன்று சிலர் தப்பி செல்லும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் அல்லது அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அதிகமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல் கொரோனா பலி மதுரையில் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது கொரோனா சந்தேகம் உடைய வாலிபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து திரும்பிய இளைஞர் ஒருவர் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் கண்காணிப்பு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் அதிகாரிகள் கவனிக்காத நேரத்தில் அந்த இளைஞர் தப்பியோடியிருக்கிறார். அவரை தேடி பிடிக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments