Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புடிச்சி உள்ள போடுங்க சார்! தப்பியோடும் கொரோனா நோயாளிகள் – பீதியில் மக்கள்!

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (12:58 IST)
கொரோனா முன்னெச்சரிக்கையாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடப்பது ஒரு பக்கம் இருக்க கொரோனா அறிகுறியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் தப்பியோடும் சம்பவம் ஒரு பக்கம் பீதியை கிளப்பியுள்ளது.

இப்படி தப்பியோடும் சம்பவம் கேரளாவில் கொரோனா தொற்று ஏற்பட தொடங்கியபோதே தொடங்கிவிட்டது. அப்போது கேரளாவில் கொரோனா தொற்று இருப்பதாக சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பி மதுரை செல்லும் ரயிலில் தப்பி சென்றதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நாடு முழுவதும் இதுபோன்று சிலர் தப்பி செல்லும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் அல்லது அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அதிகமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல் கொரோனா பலி மதுரையில் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது கொரோனா சந்தேகம் உடைய வாலிபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து திரும்பிய இளைஞர் ஒருவர் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் கண்காணிப்பு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் அதிகாரிகள் கவனிக்காத நேரத்தில் அந்த இளைஞர் தப்பியோடியிருக்கிறார். அவரை தேடி பிடிக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments